Sunday, 10 March 2019

கல்

அமைதியாக
இருந்தது
அந்தக் குளம்.

யாரோ
கல் ஒன்றை
எறிந்துவிட்டுப்
போனார்கள்.

மெலிதான
ஓசை ஒன்று
மேல்மட்டத்தில்
எழுந்து அடங்கியது.

கல்
சத்தமே இன்றி
நீருக்குள்
விரைந்து அமிழ்ந்தது.

அது எழுப்பிய
அதிர்வுகள்
வட்ட வட்ட
அலைகளாகி
கரை சேர்ந்தன.

மிதந்து
கொண்டிருந்த
பூக்கள் மட்டும்
லேசாகத்
தள்ளாடிக்
கொண்டிருந்தன..

குளத்தில் கால்களை
நனைத்துக்
கொண்டிருப்பவர்களின்
மனதிற்குள்
மிச்சமிருந்தன
இன்னும் நிறைய
கற்கள்...