Monday, 22 February 2021

தீரா மோனம்

மழைத்துளி
சொட்டுச் சொட்டாய்
விழும் சத்தம்
எதிலிருந்து வந்தது
என்பதறியாது
குளிர் ஏந்திய காற்று 
பரிதவித்து வீசிய
நொடிப்பொழுதில்
படபடத்துப் பறந்த
வண்ணத்துப் பூச்சியின்
சிறகுகளின் வண்ணம் 
ஈரத்திலும்
சாயமிழக்காத
விசித்திரத்தை
ரசிக்காது போன நிலா
ஏனோ தன்னால்
நிறப்பிரிகை
நேராத சோகத்தில்
மனம் வெதும்பிய
தருணத்தில்
புற்றுக்குள் இருந்த
எறும்புகளை
மழை நீர் பெருகி
மிதக்கழிக்க,
அத்தனை
மோனம்
பூமியிடம்.