காற்றே,
மேனிக்கு உள்ளே
நீ
புகும் போது
சுவாசம்.
மேனியின் உள்ளே
நீ
இருக்கும் வரை
மூச்சு.
மேனியின்
துளைகளின் வழி
நீ
வெளியேறி விட்டால்
மரணம்.
ஆயின்,
மூச்சற்றுப் போன
பிறகும்
துளைகளின் வழியே
காற்றை
இசையாக
மொழி பெயர்க்கும்
அந்த மூங்கில்
அல்லவா
உண்மையில்
மெய்?
No comments:
Post a Comment