என் கோப்பை
நிறையத் தேநீர்.
வழிவதற்கு முன்பாக ஊற்றுவதை ஜென் துறவி நிறுத்தி விட்டார்.
அருந்தி முடித்த பின்
கோப்பை காலியானாலும்
மனது நிறையவில்லை.
எனக்கு தாகம் தவிக்கிறது.
அந்தக் கோப்பை
இன்னும் காலியாகத்தான்
இருக்கிறது.
கோப்பையை மீண்டும்
நிறைத்துக் கொள்வதா?
இல்லையா?
என்று நான் முடிவு செய்யும் முன்பே ஜென் துறவி போய்விட்டார்.
என் வீட்டுச் சுவரில்
ஓஷோ-வோ
சிரித்துக் கொண்டே
No comments:
Post a Comment