Wednesday, 13 January 2021

எனக்காகவா நான்?

சாய்ந்திருந்த
தோள்கள்
தளர்ந்து விட,
பற்றியிருந்த
கரங்கள்
விலகிக் கொள்ள,
உறங்கிய
மடியும்
துவண்டு விட,
ரசித்து வந்த
தாலாட்டும்
நின்று போய் விட,
துளியேனும் 
வதை இல்லை
தற்காலம்.

எதையெல்லாம் இழந்தேனோ,
அவையாகவே
நான்
மாறிக் கொண்டிருக்கிறபடியால்....

No comments:

Post a Comment