நான் அந்த இடத்தைக்
கடந்து சென்ற போது
ஈன ஸ்வரத்தில்
ஒரு முனகல்
ஒலித்தது.
வெட்டப்பட்டு
வீழ்ந்து கிடந்தது
ஓர் உயிர்,
பல துண்டுகளாக.
பதறிப் போய்
செவி வைத்துக்
கேட்டேன்.
'ரொம்ப வலிப்பதால்
அரற்றுகிறாயா?'
'இல்லை, மனிதா, இல்லை,
புவிக்கு வேறு எங்கும்
கிளைகள் இல்லை தெரியுமா'
என்று சொல்லிவிட்டு
அது
மரித்தது.
No comments:
Post a Comment