Friday, 16 September 2016

விட்டில் பூச்சிகள்

மறுத்து விலகிச் சென்று
மங்கலாய் மறைந்த போது
நீ
மணலில் பதித்த
உன் கால் தடங்கள்
என் மனதில் தான்
பதிந்தன.

கட்டாயமாய் அவற்றை
மறந்து போன
தருணங்கள்
உருண்டோடிவிட்டாலும்
அவை தந்த அழுத்தம்
நெஞ்சில் ஒரு ஓரமாய்
இன்னும்
ஒளிந்து தான் கிடக்கிறது.

குழல் விளக்கில்
முட்டி மோதும்
விட்டில் பூச்சியா
நீ?

No comments:

Post a Comment