Monday, 10 October 2016

விளி

தனியாய்க் கிடந்தேன்.

என்ன இது மெளனம்
என்றபடி
தனிமையும்
சேர்ந்து கொண்டது.

உன்னுடன் தானே
இருக்கிறேன் தனியாக,
நீ வந்தால் தான்
தெளிவு என்றேன்.

அய்யோ, நான்
தங்கிவிட்டால்
அழிவு என்றது தனிமை.

பேசினோம்.
சிரித்தோம்.
ரசித்தோம்.
நிறைய.

அழுதோம்
என்று கூட ஞாபகம்.

ஆனால் என்ன,
எல்லாமே
மெளனமாக.

'ஹோ' என்ற இரைச்சலோடு
காற்றைக் கிழித்துக் கொண்டு தனிமை விடைபெற்றது,
மெளனத்தை
விட்டு விட்டு.

சிரித்துக்கொண்டேன்
நான்,
மெளனத்தின்
கரம் பற்றியவனாய்.

என்ன அங்கே சத்தம்
என்று உள்ளிருந்து
இன்னொரு சத்தம் கேட்டது.
ஏதோ முனகியிருப்பேன்
போலும்.

ஒன்றுமில்லை என்று
சொல்லிவிட்டு
பழையபடி
மெளனமானேன்.

2 comments: