நிலாவின் தாசன்
நான்.
நீயோ மழையின்
ரசிகை.
நிலவும் மழையும்
சேர்ந்திருந்த
ஒரு நாளில்
சந்தித்துப் பிரிந்த
தருணத்தில்
மழை நேரத்து
கரு முகில்கள்
வான் நிலவை
மறைத்துவிட,
திரண்டு கசிந்த
உன் கண்ணீர்
கன்னங்களை
அடையும் முன்
மழை நீர்
அதை தன்னுள்
கரைத்துக்
கொண்டது.
இப்போது புரிகிறது,
நீ நிலா என்றால்
நான் மழை....