ஏன் பேச்சைக்
குறைத்து விட்டாய்
என்று தானே கேட்கிறாய்?
பேசும்போது
முன்பே தெரிந்திருந்ததை
மட்டும் அல்லவா
பேச முடியும்?
ஆனால் கேட்கும் போது
தெரியாத ஒன்றை
புதிதாகக் கேட்க முடியும்
இல்லையா?
Silent மற்றும் listen
இரண்டுக்கும்
எழுத்துக்கள் ஒன்றே.
ஆயின்
அமைதியான மனமே
அதிகம் கேட்கும்.
மெளனத்தில் கூட
இரைச்சல் அற்ற மனதால்
பொருள் தேட இயலும்
மற்ற உயிர்கள்
ஊமைகள்.
அதனால் தான்
பேசத் தெரிந்த
மனிதன் அளவுக்கு
அவை யாருக்கும்
துரோகம் இழைப்பது
இல்லையோ?
யோசிப்போமாயின்,
படைப்பின் சேதி
ஒன்று புரியலாம்
இரண்டு கண்கள்.
நிறையப் படிப்பதற்காக.
இரண்டு காதுகள்.
நிறையக் கேட்பதற்காக.
ஆனால்
ஒரே ஒரு நாக்கு.
No comments:
Post a Comment