Tuesday, 10 April 2018

எது வரை?

இருட்டு என்பது
வெளிச்சமின்மையா?

பகல் என்பது
இருட்டின்மையா?

தண்ணீரின் அருமை
நடுக்கடல் அறியுமா?

கண்ணீரின் வலியை
தனிமை உணர்த்துமா?

அன்பின் பெருமை
அகதிகள் அறிவாரா?

மொழியின் வலிமை
ஊமைகள் அறிவாரா?

செத்த பிறகு நம்மை
நினைவுபடுத்துவது
பிறந்த நாளா?
இறந்த நாளா?

ஒரு செடியாவது
நட்டு வைத்தால்
என்ன பிடுங்கினாய்
என்று எவன் கேட்பது?

வந்த இடத்தில்
செத்துப் பிழைப்போமா?
வாழ்ந்து விட்டுச் சாவோமா?

வினாக்களின்
அணிவகுப்பில்
விடைகள்
ஒளிந்துள்ளனவோ?

விடை தேடி உய்வதே
வாழ்வாங்கு வாழ்வதா?

ஆம் எனில்,
நாம்
உயிர் வாழ்வது
வாழும் வரை.
சாகும் வரை அல்ல.

2 comments: