Tuesday, 15 January 2019

யாதெனில்- 4

எனப்படுவது யாதெனில்

/ ஆண்டவன் /

மனிதரைத் தவிர
வேறு எந்த உயிர்களாலும்
தொழப்படாதவன்.

----

/ அச்சம் /

வானத்தைப் பார்க்கும் போது வாராது அங்கிருந்து
பூமியைப் பார்க்கும் போது
வருவது.

-----
/ தனிமை /

சென்று வர இனிமை.
ஆனால்
தங்கி விடக் கொடுமை.

No comments:

Post a Comment