தனக்காக உதிக்காது
சூரியன்.
தனக்காக மலராது
பூக்கள்.
தனக்காக காய்க்காது
மரங்கள்.
தனக்காக சுற்றாது
பூமி.
தனக்காக வீசாது
தென்றல்.
தனக்காக பாயாது
நதிகள்.
தனக்காக அழிக்கிறான்
மனிதன்.
நதிக்கரைகளில்
வளர்த்ததாம் நாகரிகங்கள்.
இன்னும் அகலவில்லையே
அழுக்கு.
No comments:
Post a Comment