Thursday, 24 January 2019

நாகரிகம்

தனக்காக உதிக்காது
சூரியன்.
தனக்காக மலராது
பூக்கள்.
தனக்காக காய்க்காது
மரங்கள்.
தனக்காக சுற்றாது
பூமி.
தனக்காக வீசாது
தென்றல்.
தனக்காக பாயாது
நதிகள்.

தனக்காக அழிக்கிறான்
மனிதன்.

நதிக்கரைகளில்
வளர்த்ததாம் நாகரிகங்கள்.
இன்னும் அகலவில்லையே
அழுக்கு.

No comments:

Post a Comment