/விழிகள்/
-----
உள்ளச் சிறையின்
எண்ணங்கள்
கசிந்து வரும்
புறவாசல்.
/திருமணம்/
-------
நாம் வாங்கிய
பின்பு மறுவாரம்
சந்தையில்
அறிமுகமாகும்
புது வரவு.
/கோவில்/
------
வெளியே கை
ஏந்துபவனைத்
துரத்திவிட்டு
உள்ளே
கை ஏந்தி
நிற்குமிடம்.
/விழிகள்/
-----
உள்ளச் சிறையின்
எண்ணங்கள்
கசிந்து வரும்
புறவாசல்.
/திருமணம்/
-------
நாம் வாங்கிய
பின்பு மறுவாரம்
சந்தையில்
அறிமுகமாகும்
புது வரவு.
/கோவில்/
------
வெளியே கை
ஏந்துபவனைத்
துரத்திவிட்டு
உள்ளே
கை ஏந்தி
நிற்குமிடம்.
/தனிமை/
யாருமற்று
இருப்பதல்ல
தனிமை.
யார் யாரோ
உடனிருந்தும்
நீ
இன்றி
நானிருப்பதே
தனிமை.
---
/வாழ்க்கை/
சாகும்வரை
உயிருடன்
இருப்பதா
வாழ்க்கை?
அது
உயிரோடு
இருக்கும் வரை
வாழ்வது.
-----
/தந்தைமை/
தன் சிசுவைத்
தான்
சுமக்க இயலாத
உள் வலி.
பற்றி வந்த
கைகளை
விடுவித்து
விடை கொடுக்கும்
தவிப்பு.
மெளனமாய் உறைகின்ற
கண்ணீரின்
ஆண் பால்.
/காதல்/
எனக்காகப் புசித்து,
எனக்காக உறங்கி,
எனக்காகச் சிரித்து,
எனக்காக வாழ்ந்தது
போய்
நான்
உனக்காக
சுவாசிப்பது.
---
/காமம்/
நீயாகிய நானும்,
நானாகிய நீயும்
நாமாகிய போது
ஜீவன்
கூடு விட்டு
கூடு சேர்வது.
-----
/பிரிவு/
பெய்யென
மழை பெய்தாலும்
நிலாவிற்கு
கிட்டாது போன
வானவில்.
இதென்ன
வானவில்லின்
துண்டொன்று
விண் விடுத்து
மண் புகுந்ததோ?
மழைத்துளி விடுத்த
ஆதவன்
உன் மேல் தெறித்து
விழுந்ததினால் விளைந்த நிறப்பிரிகையோ
நீ?
உன் மென் கன்னக்
கதுப்புகளில்
மிச்சமிருந்த
நாணச் சிவப்புதான்
தீற்றிய திலகமாய்
உன் நெற்றிக்கு
இடம் பெயர்ந்ததோ?
கடிகாரம் நிறுத்திவிட்டு
காலத்தைத் தேடுகிறோம்.
திரும்ப வரும்போது
நாட்கள் நகர்ந்திருக்கும்.
அலைபேசி ஏந்தியபடி
அன்பர்களைத் தேடுகிறோம்.
அமர்த்தித் திரும்புகையில்
உறவுகளை இழந்திருப்போம்.
ஓசைகளின் இரைச்சலில்
செவிகளை மூடுகிறோம்.
களைத்துக் கழற்றுகையில்
இதயத்துடிப்பு தேய்ந்திருக்கும்.
கதவுகளைச் சார்த்தியபடி
குளிர்காற்றில் அமிழ்கிறோம்.
மின்விசை ஓயும்போது
தென்றல் கடந்திருக்கும்.
எதிர்காலக் கனவுகளில்
நிகழ் திட்டம் தொலைக்கிறோம்.
தற்காலம் கடக்கும்போது
திசைமாறிப் போயிருக்கும்.
கனவுகளைத் துரத்தியபடி
கடமைகளை மறக்கிறோம்.
ஆண்டுகள் கடந்த பின்னர்
பாடங்கள் அணிவகுக்கும்.
கண்முன்னே நடமாடும்
நிகழ்வுகளைத் துரத்திவிட்டு
கனவுகளில் உலாவரும்
மயக்கங்களில் திளைக்காதீர்.
நேற்று என்பது
வெறும் ஒரு நினைவு.
நாளை என்பது
தனிப் பெரும் கனவு.
இன்று என்பது
என்றும் மிக நன்று.
நிலவு அழகா?
வான் அழகா?
தாய் மடியில்
சிசு அழகு.
வான் வெளியில்
மதி அழகு.
மண் மீது விழுந்தாலே
மழை அழகு.
வான் மீது தவழாத
நிலவழகா?
நிலவற்ற வானுக்கு
எழில் இல்லையோ?
புவி நிழலில்
மறைந்துவிடும்
நிலவுக்கு முகம்
இல்லையோ?
நிலா சூடேறும்
வானத்தின் குளிரூட்டி.
வானம் முகிலெனும்
பொதி சுமந்து
மழை ஈனும் தாய்.
சூரியத்தந்தை
உறங்கச் சென்றதும்
நிலா மகள்
ஆட்டம் போடும் மேடை
வானம்.
கடல் கூடி
கர்ப்பம் தரித்த
வான்மேகங்களின்
கண்ணீர்ப்பிரசவம்
மழை.
வான்மகளின்
நெற்றித் திலகம்
நிலா..