/காதல்/
எனக்காகப் புசித்து,
எனக்காக உறங்கி,
எனக்காகச் சிரித்து,
எனக்காக வாழ்ந்தது
போய்
நான்
உனக்காக
சுவாசிப்பது.
---
/காமம்/
நீயாகிய நானும்,
நானாகிய நீயும்
நாமாகிய போது
ஜீவன்
கூடு விட்டு
கூடு சேர்வது.
-----
/பிரிவு/
பெய்யென
மழை பெய்தாலும்
நிலாவிற்கு
கிட்டாது போன
வானவில்.
No comments:
Post a Comment