Monday, 17 December 2018

யாதெனில்....2

/காதல்/

எனக்காகப் புசித்து,
எனக்காக உறங்கி,
எனக்காகச் சிரித்து,
எனக்காக வாழ்ந்தது
போய்
நான்
உனக்காக
சுவாசிப்பது.

---

/காமம்/

நீயாகிய நானும்,
நானாகிய நீயும்
நாமாகிய போது
ஜீவன்
கூடு விட்டு
கூடு சேர்வது.

-----

/பிரிவு/

பெய்யென
மழை பெய்தாலும்
நிலாவிற்கு
கிட்டாது போன
வானவில்.

No comments:

Post a Comment