Monday, 10 December 2018

தீற்றிய திலகம்

இதென்ன
வானவில்லின்
துண்டொன்று
விண் விடுத்து
மண் புகுந்ததோ?

மழைத்துளி விடுத்த
ஆதவன்
உன் மேல் தெறித்து
விழுந்ததினால் விளைந்த நிறப்பிரிகையோ
நீ?

உன் மென் கன்னக்
கதுப்புகளில்
மிச்சமிருந்த
நாணச் சிவப்புதான்
தீற்றிய திலகமாய்
உன் நெற்றிக்கு
இடம் பெயர்ந்ததோ?

No comments:

Post a Comment