Wednesday, 26 December 2018

யாதெனில்....3

/விழிகள்/
-----

உள்ளச் சிறையின்
எண்ணங்கள்
கசிந்து வரும்
புறவாசல்.


/திருமணம்/
-------

நாம் வாங்கிய
பின்பு மறுவாரம்
சந்தையில்
அறிமுகமாகும்
புது வரவு.


/கோவில்/
------
வெளியே கை
ஏந்துபவனைத்
துரத்திவிட்டு
உள்ளே
கை ஏந்தி
நிற்குமிடம்.

No comments:

Post a Comment