Monday, 17 December 2018

யாதெனில்...1

/தனிமை/

யாருமற்று
இருப்பதல்ல
தனிமை.

யார் யாரோ
உடனிருந்தும்
நீ
இன்றி
நானிருப்பதே
தனிமை.

---

/வாழ்க்கை/

சாகும்வரை
உயிருடன்
இருப்பதா
வாழ்க்கை?

அது
உயிரோடு
இருக்கும் வரை
வாழ்வது.

-----

/தந்தைமை/

தன் சிசுவைத்
தான்
சுமக்க இயலாத
உள் வலி.

பற்றி வந்த
கைகளை
விடுவித்து
விடை கொடுக்கும்
தவிப்பு.

மெளனமாய் உறைகின்ற
கண்ணீரின்
ஆண் பால்.

No comments:

Post a Comment