/தனிமை/
யாருமற்று
இருப்பதல்ல
தனிமை.
யார் யாரோ
உடனிருந்தும்
நீ
இன்றி
நானிருப்பதே
தனிமை.
---
/வாழ்க்கை/
சாகும்வரை
உயிருடன்
இருப்பதா
வாழ்க்கை?
அது
உயிரோடு
இருக்கும் வரை
வாழ்வது.
-----
/தந்தைமை/
தன் சிசுவைத்
தான்
சுமக்க இயலாத
உள் வலி.
பற்றி வந்த
கைகளை
விடுவித்து
விடை கொடுக்கும்
தவிப்பு.
மெளனமாய் உறைகின்ற
கண்ணீரின்
ஆண் பால்.
No comments:
Post a Comment