பெண்ணே,
இந்த முகங்களில்
இப்போது
எது உனக்கு
வேண்டும்?
உனக்கான நாட்கள்,
உனக்கான நேரம்,
உனக்கான வாழ்வு
உன்
வசமாகும் நாள் வரை
உன்னிடமிருக்கும்
அந்த முகமே
உனது முகம்.
அது வரை
நீ
கொஞ்சம்
இளைப்பாறு.
அந்நாளில்
என் அகத்தில்
நீ உன்
அகமுகம் பார்க்கலாம்
என்பதைத் தவிர
நான்
வேறென்ன பெரிதாகச்
சொல்லிவிட முடியும்?
No comments:
Post a Comment