எதுவோ....
-----------
இல்லாத ஒன்றை
எப்போதும்
சுமந்து செல்கிறேன்.
கனக்கிறது மனம்.
அதைத் தூர எறிய
ஒரு வெளி வேண்டி
எங்கெங்கோ
அலைகிறேன்.
லேசாகிறது மனம்.
சில நொடிகளில்
முழுமையாகி
மறுகணமே
பின்னமாகிறேன்.
ஆனாலும்
என்னிலிருந்து விலகி
நானே என்னை
வேடிக்கை பார்க்கிறேன்.
இருந்தும் இல்லாமல்
இருக்கிறது
என் மனமாகிய நான்.
No comments:
Post a Comment