அது
என்னுடைய
நெடுநாள் தோழன்.
சொல்லப்போனால்
அது மட்டுமே.
அது
என்னுடன் தான்
பிறந்திருந்தது.
ஆதலால் அது
என்னைத் தனித்திருக்க
அனுமதிக்காது.
அதற்கு இருட்டு
என்றால் பயம்.
இருளில் அது
என்னுள் ஓடி
ஒளிந்து கொள்ளும்.
எனவே
எனக்கும் இருள்
என்றால் பிடிப்பதில்லை.
நாங்கள் சேர்ந்தே
வெளிச்சம் தேடி
அலைகிறோம்.
அது என்னோடு
விளையாடும்.
என்னைப் பழிக்கும்.
பேசும். பாடும்.
நடிக்கும். புலம்பும்.
ஏமாறும். கதறும்.
ஆனால்,
எல்லாமே
மெளனமாக.
ஓர்
ஊமையாக.
No comments:
Post a Comment