பெண் இன்றி நிலைக்காது வாழ்வு.
பெண்ணின்றி சிறக்காது அன்பு.
பெண்ணின்றி சுரக்காது மனிதம்.
பெண்ணின்றி சிறக்காது அகிலம்.
பெண்
மகிழ்ச்சியைக் கூட்டுகிறாள்.
துயரங்களைக் கழிக்கிறாள்.
திட்டங்களை வகுக்கிறாள்.
சேமிப்பைப் பெருக்குகிறாள்.
அதனால் தான்
நாம் பின்னங்கள் ஆகாமல்
முழுமையாய் இருக்கிறோம்.
பெண்களே,
ஒரு கையில் பூங்கொத்து
கொடுத்துவிட்டு
மறுகையில் விண்ணப்பம்
ஒன்றை அளிக்கிறேன்.
உங்கள் மகள்களுக்கு
சுதந்திரத்தின் எல்லைகளை
அறிமுகப்படுத்துங்கள்.
சிறகு விரித்து அவர்கள்
விண்ணளாவட்டும்.
இது ஒரு பெண்ணைப் பெற்ற
தகப்பனின் கனவு.
உங்கள் மகன்களுக்கு
சக பெண்களை
மதிக்கக் கற்றுக் கொடுங்கள்.
இது ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனின் தவிப்பு.
ஏன் இந்தக் கோரிக்கை
ஆணுக்கு இல்லை?
ஒரு ஆண் மகனை
பாசத்தால் வசப்படுத்தி
அன்பினால் வழி நடத்த
பெண்ணால் மட்டுமே
இயலும்.
எல்லாப் பெண்களையும்
ஆண்கள்
சகோதரியாகக்
கருதக் கூட வேண்டாம்.
அவர்களை மனிதியாக
மதிக்க மட்டுவாவது
கற்றுக் கொடுப்பது நலம்.
இது
இதுகாறும் நாம்
செய்யத்தவறிய ஆனால்
என்றென்றும்
செயத்தக்க செயல்.
No comments:
Post a Comment