பெண்கள் தினம் என்பது பிறந்த நாள் போலவோ அல்லது நீத்தார் நினைவு நாள் போலவோ வருடத்தில் ஒரு நாள் மட்டும் அனுஷ்டிக்கப்படும் நாள் அல்ல.
வருடம் முழுவதும், ஏன் தன் வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு ஆணும் பெண்களுக்கான மரியாதையையும், அவளது உரிமைகளையும், அவளது கண்ணியத்தையும் மதித்தும், காத்தும், ஆராதிக்கக் கடமைப்பட்டவன் என்பதை
ஆண்கள் மறந்து விடாமல் இருக்கவும் இந்த நாள் தேவைப்படுகிறது.
சக பெண்ணை மதித்து அவள் முன்னேறக் கைகொடுத்து
தம்மைப் போல மற்ற பெண்களும் முன்னேற வழிகாட்ட வேண்டிய தார்மீகக் கடமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ளது என்பதை பெண்களுக்கு வலியுறுத்தவும் இந்த நாள் தேவைப்படுகிறது.
என் கருத்தில் woman's lib (பெண் விடுதலை, பெண் உரிமை) ஆகியவற்றை விட women empowerment என்ற சொல்லே நனிசிறந்தது என்பேன்.
அதன் பொருள் என்ன?
முண்டாசுக் கவிஞனை விட women empowerment என்பதை வேறு யாரும் தெளிவாகச் வரையறுத்துவிட முடியாது.
பாரதி சொன்னான்;
'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண்ணிங்கே
இளைப்பில்லை, காண் என்று கும்மியடி'
இந்தக் கருத்தை வலியுறுத்தவும் அதை சாதித்துக் காட்டவும் சக மனிதர்களுக்கு இன்னும் நாம் நினைவூட்ட வேண்டியிருக்கிறது என்பதும் ஒரு சமூக அவலமே.
அதைக் களையவே இந்த நாள்.
If we must celebrate a day for women, let us celebrate freedom from stereotypes, from expectations, from idolisation, from sacrifice.
Stop congratulating women for being the secret behind a successful man...
Start saluting them for being successful.
Stop saying the mother is sacred for all the sacrifices she makes...
Try to reduce those sacrifices.
Stop justifying her necessity to multi task. Give her a chance not to.
Stop making her look at herself through a conveniently male viewpoint.
Stop praising her roles as mother, wife, daughter, sister.
Celebrate her as an individual, a person, independent of relationships.
Celebrate the essence of womanhood, each day, every day!
பாரதி கண்ட சக்தியாக
வாழ்ந்து காட்டுங்கள் தோழியரே!
ஆண்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கட்டும்!
வாழ்த்துகள்.
No comments:
Post a Comment