அவன் அவளை
எதிர்பாராமல்
அந்த உணவகத்தில்
பார்த்தான்.
உடன் இருந்தவன்
கணவனாக
இருக்க வேண்டும்.
அந்தக் குழந்தை
அவர்களுடையதாக
இருக்கவேண்டும்.
கொஞ்சம்
பூசினாற் போல
இருந்தாள்.
பழைய வடிவும்
வனப்பும் அவளிடம்
இருந்து கொஞ்சமாய்
விடை பெற்றிருந்தன.
திடீரென்று அவள்
கணவன் அவளை
வசை மாரி
பொழிந்தான்.
காதல்
மொழிகளையே
கேட்டுப் பழகியிருந்த
செவிகளில்
அவை நெருப்புத்
துண்டுகளாகத்
தெறித்து
விழுந்திருக்கும்.
இதற்குத் தானா நீ...
என்று அவன்
நினைத்த போது
இவள் வந்தாள்.
'அறிவிருக்கா
உனக்கு?'
என்று லட்சார்ச்சனை
துவங்கினாள்.
பையன் கேட்டான்.
'அப்பா பின்னம்- னா
என்னப்பா?'
No comments:
Post a Comment